முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்

Thursday, July 23, 2009

மும்பை பங்குச் சந்தை: 388 புள்ளிகள் உயர்வு 23-8-09 11.45pm

மும்பை, ஜூலை 23: பெரும்பாலான நிறுவனங்கள் முதல் காலாண்டில் லாபம் ஈட்டியதால் வியாழக்கிழமை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. இதனால் 388 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 15,231 புள்ளிகளைத் தொட்டது.

தேசிய பங்குச் சந்தையிலும் 124 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 4,523 புள்ளியாக உயர்ந்தது.

ஆசிய பங்குச் சந்தை மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து மும்பை பங்குச் சந்தையிலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

முக்கிய நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி லிமிடெட், மாருதி சுஸýகி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்ததும் பங்குச் சந்தை உயர்வுக்குப் பிரதான காரணமாகும். இந்த 5 நிறுவனங்களின் பங்கு விலை உயர்வு 34 சதவீத உயர்வுக்கு வழிவகுத்தது. இதுவரை 11 நிறுவனங்கள் தங்களது காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளன. இவற்றில் 9 நிறுவனங்களின் செயல்பாடு எதிர்பார்ப்புக்கும் அதிகமாகவே இருந்தது.

கட்டுமான நிறுவனங்களின் பங்குகள் மற்றும் எஃப்எம்சிஜி எனப்படும் அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலைககளும் கணிசமாக உயர்ந்தன.

No comments:

Post a Comment

பயன்படுத்தியவர்கள்